களப்பயணம் என்பது வகுப்பறைக்குள் கொண்டு வரமுடியாத பொருட்கள்,கருத்துகளோடு மாணவர் முழுமையான புலன் அனுபவம் பெற வேண்டுமென்பதற்காக வடிவமைக்கப்பட்ட பயிற்சி ஆகும்.
1)களப்பயிற்சிக்கு முந்தைய கட்டம்:
ஆசிரியர் பாடப்புத்தகத்தை ஊன்றி படிக்கச் செய்கிறார்.ஒளிப்பேழை/நழுவல்களை இயக்கி,கண்ணுறச் செய்கிறார்.
2)களப்பயிற்சி கட்டம்:
ஆசிரியர் மாணவர்களோடு குறிப்பிட்ட இடத்தைச் சென்றடைந்து தகவல்கள்/காட்சிகள் சேகரித்து குறிப்புகள் வழங்கிகிறார்.
3)களப்பயிற்சிக்கு பிந்தைய கட்டம்:
வகுப்பறைக்கு திரும்பியபின்,சேகரித்த தகவல்களை விவாதித்து உற்றுநோக்கல்,ஒப்படைப்புகள்,கதைகள்,கவிதைகள்,கட்டுரைகள் போன்ற வடிவங்களில் ஆசிரியரிடம் மாணவர்கள் சமர்ப்பிப்பர்.
இவ்வணுகுமுறை,முறையாக செயல்பட்டால்,மாணவர்கள் தாம் உற்றுநோக்கிய காட்சிகள் பதிவு செய்து,ஏற்கனவே பெற்ற தகவல்களின் அடிப்படையில் அளிப்பர்.மாணவர்கள் நேரிடை அனுபவங்கள் பெற உதவிடுகிறது.
இவ்வணுகுமுறை,முறையாக செயல்பட்டால்,மாணவர்கள் தாம் உற்றுநோக்கிய காட்சிகள் பதிவு செய்து,ஏற்கனவே பெற்ற தகவல்களின் அடிப்படையில் அளிப்பர்.மாணவர்கள் நேரிடை அனுபவங்கள் பெற உதவிடுகிறது.
No comments:
Post a Comment