Thursday, 8 February 2018

today

களப்பயணம் என்பது வகுப்பறைக்குள் கொண்டு வரமுடியாத பொருட்கள்,கருத்துகளோடு மாணவர் முழுமையான புலன் அனுபவம் பெற வேண்டுமென்பதற்காக வடிவமைக்கப்பட்ட பயிற்சி ஆகும்.

1)களப்பயிற்சிக்கு முந்தைய கட்டம்:

  ஆசிரியர் பாடப்புத்தகத்தை ஊன்றி படிக்கச் செய்கிறார்.ஒளிப்பேழை/நழுவல்களை இயக்கி,கண்ணுறச் செய்கிறார்.

2)களப்பயிற்சி கட்டம்:

   ஆசிரியர் மாணவர்களோடு குறிப்பிட்ட இடத்தைச் சென்றடைந்து தகவல்கள்/காட்சிகள் சேகரித்து குறிப்புகள் வழங்கிகிறார்.

3)களப்பயிற்சிக்கு பிந்தைய கட்டம்:

   வகுப்பறைக்கு திரும்பியபின்,சேகரித்த தகவல்களை விவாதித்து உற்றுநோக்கல்,ஒப்படைப்புகள்,கதைகள்,கவிதைகள்,கட்டுரைகள் போன்ற வடிவங்களில் ஆசிரியரிடம் மாணவர்கள் சமர்ப்பிப்பர்.
 
   இவ்வணுகுமுறை,முறையாக செயல்பட்டால்,மாணவர்கள் தாம் உற்றுநோக்கிய காட்சிகள் பதிவு செய்து,ஏற்கனவே பெற்ற தகவல்களின் அடிப்படையில் அளிப்பர்.மாணவர்கள் நேரிடை அனுபவங்கள் பெற உதவிடுகிறது.

No comments:

Post a Comment