Tuesday, 27 February 2018

today

இன்று மீச்சிறு கற்பித்தலில் வெப்பம் வாயுவிதி  பற்றி பாடத்திட்டம் வரைந்தேன் . தேசிய மதிய உணவு செயல்படும் விதம் பற்றி படித்தேன் . ஆசிரியர் பணி குறித்த மாணவ , ஆசிரியர்களின் மனப்பான்மை  பற்றி படித்தேன் . குழந்தையின் வளர்ச்சியை மேம்படுத்துவதில் விளையாட்டின் பங்கு பற்றி படித்தேன் .

Tuesday, 20 February 2018

today

போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பில் ஏற்பட்டுள்ள மாற்றமாகும்.

காரணிகள்;
தனியார் மயமாக்கம்- வளமை.
தாரளமயமாக்கம்-எழுச்சி.
நுகர்வோர்மையம்-வரவேற்பு.
குறைந்த செலவில் பொருட்களின் உற்பத்தி. தகவல்தொடர்பில் அபரிமிதமான வளர்ச்சி.

விரும்பத்தகு தாக்கங்கள்;
உயர்தொழில்நுட்பங்களின் வரவு.
பன்னாட்டு வணிகப் பெருக்கம்.
வேலைவாய்ப்பு பெருக்கம்.
அன்னிய முதலீடு தாராளமாகக்கிடைத்தல்.

எதிர்மறைத்தாக்கங்கள்;
நாடுகளுக்கு இடையே சமமற்ற தன்மை.
நிலையற்ற நிதிநிலை.
பணியாளர்களின் மீதான தாக்கம்.
விவசாயிகளின் மீதான தாக்கம்.
சுற்றுச்சூழல் சீர்கேடு.
பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம்.
  போன்றவை தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் தேர்வு எழுதினோம்.

Today

இன்று பொருளறிவியல் கற்பித்தலில் மீச்சிறு கற்பித்தலுக்கு பாடவரைவு எழுதினேன் . குழந்தைப் பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சிகளும் பற்றி படித்தேன் .தேசிய கலைத்திட்ட கட்டமைப்பின் நோக்கு , கற்றலும் அறிவும் பற்றி படித்தேன் . விளைபயன்மிக்க கற்பித்தல் என்பதன் வரையறை , இயல்புகள் பற்றி தேர்வு எழுதினேன் . எழுதுதல் செயல்பாட்டில் இடம் பெறும் படிநிலைகள் பற்றி படித்தேன் .

Monday, 19 February 2018

today

பெண்தன்மையுடனோ அல்லது ஆண்தன்மையுடனோ எவரும் பிறப்பதில்லை;அத்தகைய தன்மையுடையவராக ஆக்கப்படுகிறார் என சைமன் டி ப்யூவோர்  பாலின தன் அடையாளம் பற்றி கூறுகிறார்.குமரப்பருவத்தில் உருவாகும் பாலினத்தன்டையாளம் முதிர் வாலிப வயத்திற்கும் இடைப்பட்ட பருவமாகும். இதில் மூன்று மாற்றங்களை குறிப்பிடுகின்றனர்.

  தற்கருத்து
ஒருவர் தன்னைப் பற்றிக் கொண்டுள்ள மனபிம்பம், மனப்பான்மைகள்,உணர்ச்சிகளின் தொகுப்பே ஒட்டுமொத்த தற்கருத்தாகும்.

அதிரடியான உடல் வளர்ச்சி
  குமரப்பருவத்தில் ஆண்களும்,பெண்களும் உடல்வளர்ச்சியின் உச்சத்தை அடைகிறார்கள்.உயரம்,எடை இவை அதிகரிப்பதோடு,கை,கால்கள் நீளமாகவும் காணப்படும்.

எதிர்பாலினக்கவர்ச்சி
   குமரப்பருவத்தில் பாலுட்டிசுரப்பிகள் இயங்கத் தொடங்குவதால் பாலுணர்வு அதிகரித்து காணப்படும். இதில் மனக்கிளர்ச்சி,கவனச்சீர்குலைவும் மாணவர்களை அலைக்களிக்கும்.
போன்றவை குழந்தைப்பருவமும் வளர்ச்சியும் பாட வேளையில் தேர்வு எழுதினோம்.

Today

இன்று எரிக்சனின் குழந்தை வளர்ச்சி நிலை  , பாலின தப்பெண்ணங்கள் , இந்தியாவில் பாலின தப்பெண்ணங்கள் உருவாகுவதன் காரணம் பற்றி தேர்வு எழுதினேன் . இந்தியக் கல்வியில் தற்போது தாராளமயமாக்குதலின் தற்போதைய நிலை பற்றி படித்தேன் . கற்பித்தலும் அதன் தன்மையும் இயல்புகளும் பற்றி படித்தேன் . தேசிய முன்னேற்றத்திற்கு உதவும் வகையிலான அறிவியல் மற்றும் கணிதம் கற்பித்தல் பற்றி தேர்வு எழுதினேன் .

Saturday, 17 February 2018

today

வகுப்பறை கற்பித்தலின்போது அதிக தடவை மாணவர்கள் தமது நேரத்தை கற்றல் செயல்களில் ஈடுபட பயன்படுத்தினால்,அதிகளவு கற்கிறார்கள்.

   கற்றல் செயல்களில் மாணவர்களது ஈடுபாட்டு நிலைகளான மாணவர்களின் உண்மையான ஈடுபாடு, சடங்கு ரீதியான பணிவிணக்கம்,செயல்முனைப்பற்ற பணிவிணக்கம் கொள்ளுதல்,பின்னடைதல்,எதிர்ப்புணர்ச்சிக்காட்டுதல் போன்றவையாகும்.

   மாணவர்களது கற்றல் ஈடுபாடு நிலையை வெளிப்படுத்தும் மூவகை வகுப்பறை நிகழ்வுகளான கற்றல்செயல்களில் ஆழ்ந்து ஈடுபாடு காணப்படும் வகுப்பறை,பணிவிணக்கம் கொண்ட வகுப்பறை,பணிலிருந்து விலகிக் காணப்படும் வகுப்பறை முறைகள் காணப்படுகிறது என்பது பற்றி கற்றலும் கற்பித்தலும் பாட வேளையில் தேர்வு எழுதினோம்.

Friday, 16 February 2018

today

நாட்டின் அனைத்து பகுதி மக்களையும் இணைத்து,ஒட்டி உறவாடிட இணைப்பு மொழி இல்லாது,பிரிவினை சக்திகள் தலைதூக்கிட முக்கியமான காரணிங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
   இந்தி மொழியை தேசிய மொழியாகவும், இணைப்பு மொழியாகவும் சுதந்திர இந்தியாவில் அங்கீகரிக்க வேண்டும் என்று தீர்மானித்தனர்.இந்தி மொழி இந்தியாவின் அரசு அலுவலக மொழியாக வளங்குவது உறுதி செய்யப்பட்டது.
  அரசியல் சாசனப்பிரிவுகளின்படி 1965ம் ஆண்டு ஜனவரி திங்கள் 26-ம் நாள், இந்திமொழி இந்திய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டது.தென்னிந்தியாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பி கிளர்ச்சிகள் தொடர்ந்தன.இந்தியோடு ஆங்கிலமும்,அரசு அலுவல் மொழியாக விளங்கும் என்று இந்தியப்பார்லிமெண்டில் எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கப்பட்டது.
  எல்லோரையும் மனமுவந்து ஏற்க வைப்பதே சாலச்சிறந்தது.நாட்டில் பல மொழிகள் புழங்குவது தீதல்ல.ஆனால் ஒவ்வொரு பகுதி மக்களும் தத்தம் தாய்மொழியே எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்று வெறிகொள்ளல்,தவறான போதனைகள் நாட்டைப்பிளந்திடும் சக்திகளாகும்.
தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் தேர்வு எழுதினோம்.

Today

இன்று வெப்பம் வாயுவிதி , ஔியியல் பற்றி அறிந்தேன் . சமுகவியல்பாக்கல் , அவற்றின் வகைகள் பற்றி படித்தேன் . கல்வி ஆதாரங்கள் அவற்றின் கொள்கைகள் பற்றி படித்தேன் . மாணவர்கள் கற்றல் செயல்களில் ஈடுபடுதல் மேம்படுத்திடும் வழிமுறை பற்றி தேர்வு எழுதினேன் . பல்பாடத்துறை நோக்கில் அமைந்த கலைத்திட்டம் , வாழ்க்கைசார் கலைத்திட்டத்தின் களங்கள் பற்றி படித்தேன் . பாலின தன் அடையாள பங்கு பற்றி படித்தேன் .

Thursday, 15 February 2018

today

பொருத்தமான கற்பித்தல்-கற்றல் சூழலை உருவாக்குதல்,கற்பித்தல் - கற்றல் செயலைத்திட்டமிட்ட படி நடைபெறச்செய்தல்.வகுப்பறை மேலாண்மையின் உட்கூறுகளும் காணப்படுகிறது.
திட்டமிடல்;
   வகுப்பறை அமைப்பை ஆராய்தல்,மாணவர்களின் தயார் நிலையை உறுதிசெய்தல்,நுழைவு நடத்தையை சோதித்தறிதல்,தேவைகளை அடையாளங்காணுதல்,குறிக்கோளை நிறுவுதல்,குறையறி சோதனையை உருவாக்கிக்கொள்ளுதல் போன்ற செயல்முறையாகும்.
கட்டமைத்தல்;
   குறிப்பிட்ட பாடத்தை சாதனங்களை சேகரித்து,முறைப்படி அமைத்தல்,வரிசைக்கிரமமாக அமைத்து கொள்ளுதல்.
முன்னின்று செயற்படுத்துதல்;
   கற்பிக்கும் சொற்பொழிவு முறை, செய்து காட்டல் முறை, செயல்திட்டத்தை மேற்கொள்ள உதவுதல்,ஒளிப்பேழை/
ஒலிநாடாக்களின் செளல்களாகும்.
கட்டுப்படுத்துதல்;
   வகுப்பறையில் கற்பித்தல்-கற்றல் செயல் செம்மையாக நடைபெற மாணக்கரின் கவனமின்மையைப் போக்குதல்,கண்டிப்புடன் நடந்து கொள்ளுதல்,மெல்லக்கற்போர் வேறொரு பயிற்று மொழியில் பயில்வோர் வகுப்பறை செயல்களை மாணக்கரின் நடத்தையை கட்டுப்படுத்த முடியும்.

Today

இன்று பொருளறிவியல் கற்பித்தலில் இயக்கம் ஔியியல் பற்றி கற்றறிந்தேன் . எரிக்சனின் உள சமுகவளர்ச்சி பியாஜேவின் அறிதிறன் வளர்ச்சி வைக்காட்ஸ்கியின் அறிதிறன் வளர்ச்சி கொள்கை பற்றி கற்றறிந்தேன் . நவின மயமாதல் , நன்மைகள் தாக்கங்கள் , அனைவருக்கும் கல்வி மத்திய மாநில கல்வி தேசிய கல்வி முறை பற்றி தேர்வு எழுதினேன் . ஆசிரியர் மாணவர் இடைவினை , வகுப்பறை செயல்களில் மாணவர்களின் செயல்பாடுகள் , கற்றல் முறை பற்றி படித்தேன் .

Wednesday, 14 February 2018

today

சட்டபிரிவு-343: இந்தியாவின் அரசு அலுவலக மொழி
  
   உட்பிரிவு(1) - தேவநாகரி எழுத்து வடிவம் கொண்ட ஹிந்தி மொழியே இந்தியாவின் அரசு அலுவலக மொழியாக இருக்கும்.
   உட்பிரிவு(2) - ஜனாதிபதி விரும்பினால் ஆங்கிலம் பயன்படுத்தப்படும் இடங்களில் ஆங்கிலத்தோடு,இந்தியையும் பயன்படுத்திட உத்தரவு பிறப்பித்திடலாம்.
  உட்பிரிவு(3) - ஆங்கிலத்தை தொடர்ந்து பயன்படுத்துதல்.தேவநாகரி வடிவிலான எண்களைக் குறிப்பிட்ட விஷயங்களுக்கு பயன்படுத்திடல்.
 
சட்டபிரிவு-345:மாநிலங்களின் அலுவலக மொழி

   சட்டபிரிவு 346,347 க்கு ஏற்ப,மாநில சட்டமன்றம்,ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளை தனது மாநில மொழியாக தேர்வு செய்து சட்டம் அறிவித்திடலாம்.

சட்டபிரிவு-347: ஒரு மாநிலத்தில் குறிப்பிட்ட மொழியைப் பேசுவோர் அதனை அரசு அலுவலக மொழியாக அறிவிக்கக் கோருதல்

   கணிசமானோர் தாம் மொழியை மாநில அரசு அலுவல் மொழிகளில் ஒன்றாக சேர்த்திட கோரினால்,ஜனாதிபதி ஏற்று,உரிய உத்தரவு பிறப்பிக்கலாம்.
  தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் தேர்வு எழுதினோம்.

Tuesday, 13 February 2018

Today

இன்று பொருளறிவியல் கற்பித்தலில் பாடங்கள் அது அப்பாடம் சார்ந்த வினாக்கள் அவற்றின் மதிப்பிடு , வினா தேர்வுசெய்து அவற்றில் அறிந்துகொள்ளுதல் , பரிந்துகொள்ளுதல் ,  திறனின்வெளிப்பாடு பயன்கள் அகியவற்றை அறிந்தேன் . குழந்தை வளர்ச்சிபற்றிய ஐந்து வகையான கொள்கைகளை படித்தேன் . தற்கால இந்தியாவில் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களுக்கு மாதிரி வினா கற்பிக்கப்பட்டது . வகுப்பறை மேலாண்மைச் செயல்களும் அவற்றின் உட்கூறுகளும் பற்றி தேர்வு எழுதினேன்

Monday, 12 February 2018

today

பொருள்;

    இந்திய அரசின் கல்விக் கொள்கையை வகுக்கும் "மத்திய கல்வி ஆலோசனை வாரியம்",இடைநிலைக்குழுவின் பரிந்துரைகள் மறுத்து,1956-மும்மொழித்திட்டத்தை உருவாக்கியது.

பிரச்சினைகள்;
  
    பள்ளிக்கல்வித்திட்டம்,மாணவர்களுக்கு பெரும் சுமையாக மாறிப்போனது,இந்தி மொழி கற்க ஆர்வமின்மை, தமிழ்நாட்டில் இந்தி பயில்வதற்கு கடும் எதிர்ப்பு,6-10 வகுப்பு வரை,5 ஆண்டுகளுக்கு இரண்டாவது,மூன்றாவது மொழியைக் கற்பிக்க ஆகும் செலவும்,முயற்சியும் மிகவும் அதிகம்.

கோத்தாரி கல்வி குழுவின் பரிந்துரைகள்(1964-1966);

மும்மொழித்திட்டத்தை ஒப்புக்கொள்ளவில்லை,திருத்தம் செய்து "திருத்தியமைக்கப்பட்ட மும்மொழிக் கொள்கை" வெளியிட்டது.
  1)தாய்மொழி/வட்டார மொழி
  2)அரசு அலுவலக மொழி ஆங்கிலம்
  3)நவீன இந்திய அல்லது ஐரொப்பிய மொழி ஒன்று

Today

இன்று சி ஆர் ஐ  ~ கணினி பயன்படுத்துவதன் மூலம் பார்வை குறைபாடு எற்படுகிறது என்பது பற்றிய தகவல்கள் அறிந்தேன் .  தேசிய கலைத்திட்டம் பற்றி படித்தேன் . ஆசிரியர் மாணவர் உறவுமுறை , ஆசிரியர் மாணவர் இடையே நல்லுறவு பேண வேண்டியதன் அவசியம் , ஆசிரியர் மாணவர் நல்லுறவை மேம்படுத்திடும் ஆலோசனைகள் பற்றி தேர்வு எழுதினேன் .பெண்கள் மீதான வன்முறையும் மகளிர் பாதுகாப்பும் பற்றி படித்தேன் .

Saturday, 10 February 2018

today

களப்பயணம் மற்றும் கள ஆய்வு மூலம் கற்றல்;

    மாணவர்கள், சூழ்நிலையோடு நெருக்கமான தொடர்பைப்பெற உதவுகிறது, கற்போரிடையே துடிப்பான கற்றலை ஊக்குவிக்கிறது,கூர்ந்து நோக்கும் திறனையும் ஆய்வுத்திறனையும் வளர்த்திடுகிறது,மாணவர்களிடம் சமூகத்திறன்களை மேம்படுத்துகிறது,மாணவர்களிடம் பிரச்சினையைத் தீர்க்கும் திறனை வளர்க்கிறது.

வலைப்பின்னல் தளங்களைப்பயன்படுத்தி கற்றல்;

   பொருள் படைக்கும் ஆற்றல்,உரைநடைப்பகுதிகளை ஆராய்ந்தறிந்து பொருளுரைத்தல் திறன்களை வளரச்செய்கிறது,கற்போரை மையமாகக் கொண்டு அமைகிறது,துடிப்பான கற்றலை ஊக்குவிக்கிறது, குழு உறுப்பினர்களிடையே ஒத்துழைப்பையும்,புரிந்துணர்தலையும் வளர்க்கின்றது.

பள்ளிக்கு வெளியே கற்றலின் வரம்புகள்;

  பள்ளி பாடவேளை அட்டவணையை அமைத்திடல் மிகவும் கடினம்,செலவு மிக்கது,மாணவர்களின் பாதுகாப்பின்மை,களப்பயணத்தை திட்டமிடுதலும்,நடத்திடலும் சவாலான பணியாகும்.

Friday, 9 February 2018

today

பொது மக்களது நிதி உதவி;
 
   தனி மனிதர்களும்,அறக்கட்டளைகளும், வணிக நிறுவனங்களும் கல்வி நிலையங்களை ஏற்படுத்தி நடத்தி வருகின்றன.கல்வி நிலையங்களகன் வளர்ச்சிக்காக நிலமாகவோ,பொருளாகவோ,பணமாகவோ,கட்டிடங்களாகவோ உதவி செய்து வருகின்றனர்.

கல்விக்கட்டணம்;

  பத்தாவது வகுப்பு வரை அரசு மற்றும் அரசுநிதி உதவி பெறும் பள்ளிகளில் கல்விக்கட்டணம் கிடையாது. உயர்கல்வியில் அரசு கல்வி நிலையங்களில் கட்டணங்கள் குறைவாக உள்ளன.எதாவது ஒரு வகை கட்டணச்சலுகை பெறுகின்றனர்.

மாணவர்களுக்கான கல்விக்கடன்;

  அரசுடையாக்கப்பட்ட வங்கிகளில் மாணவர்களுக்கு குறைந்த வட்டியில் நீண்ட கால படிப்புதவிக்கடன் வழங்குகிறது.45%அளவு தமிழக மாணவர்களே படிப்புதவித்தொகை பெறுகின்றனர்.

வெளிநாட்டு நிதி உதவி;

  வெளிநாடுகளிலிருந்து இந்தியா பெற்ற நிதி உதவி:
  ஆண்டு 2013:421 மில்லியன் டாலர்கள்
  ஆண்டு 2014:806 மில்லியன் டாலர்கள்

போன்றவை தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் தேர்வு எழுதப்பட்டது.

Today

இன்று பொருளறிவியல் கற்பித்தலில் ஒய்வு இயக்கம் தொலைவு இடப்பெர்ச்சி வேகம் திசைவேகம் ஒலியியல் பற்றி மீச்சிறு கற்பித்தல் நடைபெற்றது . சமூகப் பல்வகைமையின் நிலைகள் , உலகளாவிய இடைநிலைக்கல்வி பற்றி தேர்வு எழுதினோன் . ஆசிரியர் மாணவர் உறவுமுறை , ஆசிரியர் மாணவர் இடையே நல்லுறவு பற்றி படித்தேன் . விரிகள கலைத்திட்டம் , விரிகள கலைத்திட்டத்தின் பயன்கள் , குறைகள் பற்றி தேர்வு எழுதினேன் .

Thursday, 8 February 2018

today

களப்பயணம் என்பது வகுப்பறைக்குள் கொண்டு வரமுடியாத பொருட்கள்,கருத்துகளோடு மாணவர் முழுமையான புலன் அனுபவம் பெற வேண்டுமென்பதற்காக வடிவமைக்கப்பட்ட பயிற்சி ஆகும்.

1)களப்பயிற்சிக்கு முந்தைய கட்டம்:

  ஆசிரியர் பாடப்புத்தகத்தை ஊன்றி படிக்கச் செய்கிறார்.ஒளிப்பேழை/நழுவல்களை இயக்கி,கண்ணுறச் செய்கிறார்.

2)களப்பயிற்சி கட்டம்:

   ஆசிரியர் மாணவர்களோடு குறிப்பிட்ட இடத்தைச் சென்றடைந்து தகவல்கள்/காட்சிகள் சேகரித்து குறிப்புகள் வழங்கிகிறார்.

3)களப்பயிற்சிக்கு பிந்தைய கட்டம்:

   வகுப்பறைக்கு திரும்பியபின்,சேகரித்த தகவல்களை விவாதித்து உற்றுநோக்கல்,ஒப்படைப்புகள்,கதைகள்,கவிதைகள்,கட்டுரைகள் போன்ற வடிவங்களில் ஆசிரியரிடம் மாணவர்கள் சமர்ப்பிப்பர்.
 
   இவ்வணுகுமுறை,முறையாக செயல்பட்டால்,மாணவர்கள் தாம் உற்றுநோக்கிய காட்சிகள் பதிவு செய்து,ஏற்கனவே பெற்ற தகவல்களின் அடிப்படையில் அளிப்பர்.மாணவர்கள் நேரிடை அனுபவங்கள் பெற உதவிடுகிறது.

Wednesday, 7 February 2018

today

பத்தாவது ஐந்தாண்டு திட்டம்
 
  வறுமை விகித்தை 2007 க்குள் 5% ஆக குறைத்தல்,புதிதாக வேலைக்குச் சேருவோர் வேலை வாய்ப்புக்கான திறனைப்பெற்றிருத்தல் மற்றும் திட்ட முதலிடு:921,291கோடி ரூபாய் கொண்டு திட்டமிடப்பட்டது.

       பதினொன்றாவது ஐந்தாண்டு திட்டம்

   பாலின சமத்துவமின்மையைக் கறைத்தல்,சுத்தமான குடிநீர் 2009 க்குள் அனைவருக்கும் கிடைக்கச் செய்தல்,கருத்தரிப்பு விகித்தை 2.1 எனக் குறைத்தல்.
 
      பன்னிரெண்டாவது ஐந்தாண்டு திட்டம்
 
   இத்திட்டம் இரண்டு ஆண்டுகள் மட்டும் நீடித்தது.ஆதார் அடையாள அட்டையை எல்லா குடிமக்களுக்கும் வழங்கல்,கருப்பு பணத்தை வெளிக்கொணர்தல்,மின்னணு பரிமாற்றத்தை நடைமுறைப்படுத்துதல்.
 
  போன்றவை தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் தேர்வு எழுதினோம்.

Tuesday, 6 February 2018

study

பொருளறிவியல் கற்பித்தல் பாட வேளையில் குறுநிலை கற்பித்தல் கலந்துரையாடப்பட்டது.

   கற்றலும் கற்பித்தலும் பாட வேளையில் பள்ளிக்கு வெளியே கற்றலின் நன்மைகள் தேர்வு எழுதினோம்.

  தற்கால இந்தியாவும் கல்வியும் பாட எட்டாம் ஐந்தாண்டு திட்டம் தேர்வு எழுதினோம்.

   பாலினம், பள்ளி சமுதாயம் பாட வேளையில் மொழிப்பயன்பாட்டில் பாலின  சமவத்துவம் கலந்துரையாடப்பட்டது.

  பாடங்களை புரிந்து கொள்ளுதல் பாட வேளையில் விரிகள பாடத்திட்டம் பற்றி அறிந்து கொண்டோம்.

Monday, 5 February 2018

today

பொருளறிவியல் கற்பித்தல் பாட வேளையில் மாதிரி பாடத்திட்டம், குறுநிலை கற்பித்தல் கலந்துரையாடப்பட்டது.
  கற்றலும் கற்பித்தலும் பாட வேளையில் வகுப்பறைக்கு வெளியே கற்றலுக்கான அணுகுமுறைகள் தேர்வு எழுதப்பட்டது.
  தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் ஐந்தாவது,ஆறாவது,ஏழாவது ஐந்தாண்டு திட்டத்தின் கல்வியின் நிதி ஒதுக்கீடு தேர்வு எழுதப்பட்டது.
  குழந்தைப்பருவமும் வளர்ச்சியும் பாட வேளையில் திட்டவிடும் பாம்பு.இது கண்ணில் பார்த்தாலே விஷம், கண்ணில் விஷத்தை கொட்டி விடும் தன்மை கொண்டது என்பதை புதிதாக கற்று கொண்டோம்.
  கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழியில் குறிப்பெடுத்தலின் உத்திகள் படித்து கொண்டுருந்தோம்.

Saturday, 3 February 2018

today

இன்று பொருளறிவியல் கற்பித்தல் பாட வேளையில் குழு கற்பித்தல்,அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தேர்வு எழுதினோம்.
  கற்றலும் கற்பித்தலும் பாட வேளையில் உற்றுநோக்கி கற்றல்,பள்ளிக்கு வெளியே கற்றலின் முக்கியத்துவமும், வட்டார தேவைகளுக்கு ஏற்ப கலைத்திட்டத்தைக்கற்றலை விரிவுப்படுத்துதல் தேர்வு எழுதினோம்
  தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் மூன்றாம்,நான்காம் ஐந்தாண்டு திட்டங்கள் தேர்வு எழுதினோம்.
  குழந்தைப்பருவமும் வளர்ச்சியும் பாட வேளையில் படிப்பதை எவ்வாறு நினைவில் வைத்திருப்பது என்பதை கற்றுக்கொடுத்தார்.
  பாடத்துறைகளையும் பாடங்களையும் புரிந்து கொள்ளுதல் பாட வேளையில் விரிகள கலைத்திட்டம் படித்து கொண்டிருந்தோம்.
  அடுத்த பிரிவு வேளையில் குறுகிய காலக்கட்டத்தில் தேர்வுக்கு எவ்வாறு தயார் செய்வது என்பதை கற்றுக்கொடுத்தார்.

Thursday, 1 February 2018

today

இன்று பொருளறிவியல் கற்பித்தல் பாட வேளையில் பொருளறிவியல் கற்பித்தல் திறன் திறனின் உட்கூறுகள், அறிவியல் முறை, செயல் திட்ட முறை, புதிர்களை தீர்க்கும்  முறை தேர்வு எழுதினோம்.
   கற்றலும் கற்பித்தலும் பாட வேளையில் பள்ளிக்கு உள்ளே மற்றும் வெளியே கற்றல் முறைகள் கலந்துரையாடப்பட்டது.
    தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் வாழ்நாள் முழுவதும் கல்வி,இணைய வழிக் கல்வி கலந்துரையாடப்பட்டது.
  குழந்தை பருவமும் வளர்ச்சியும் பாட வேளையில் சமூகவியல்பாக்கும் முகமைகள் படித்து கொண்டிருந்தோம்.
   பாடங்களை புரிந்து கொள்ளுதல் பாட வேளையில் பல்பாடத்துறை கலைத்திட்டம் தேர்வு எழுதினோம்.